* உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
* உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
* உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
* மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
* மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
* ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
* ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!
- பிரவீன் குமார் செ
http://www.cpraveen.com/suvadugal/love-war-tamil-poem/