நிழல் தேடி நெருங்கும்பொழுதெல்லாம்
வெயில் பொழியும் விருட்சம்
நீ.
நம் பிரிவைப் பற்றி அறியாமல்
வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்.
கிழிக்க மனமின்றி
பத்திரப்படுத்திய உன் கடிதங்களை(sms)
வாசிக்கும்பொழுதெல்லாம் கிழிகிறது
மனம்.
நம் பிரிவுக்குப் பிறகு
பல முறை தூக்கியெறிந்திருக்கிறேன்
நீ பரிசளித்த பொருட்களை,பகல் கனவில்..!
நீயும் தேவதைதான்.
நம் காதலும் தெய்வீகமானதுதான்.
என்னை மட்டுமேன் நாத்திகன் ஆக்கினாய்?